க.பொ.த. சாதாரணதர பரீட்சை இன்று: மாணவர்களுக்கு விசேட மருத்துவ ஆலோசனை

Date:

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை இன்று (06) ஆரம்பமாகின்றது.

நாடளாவிய ரீதியில் 3,527 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

மொத்தமாக 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்ற நிலையில், 387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சில விசேட வைத்திய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

நாட்டில் தற்போது மிகவும் வெப்பமான காலநிலை நிலைவரும் நிலையில், அது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் திரவ பானங்களை உட்கொள்வது பொருத்தமானது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும், பரீட்சைக்கு செல்லும் போது குடையோ அல்லது வெயிலில் படாதவாறு மறைப்பதற்கு பொருத்தமான ஒன்றையோ பயன்படுத்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நுளம்புகள் பெருகக்கூடிய பரீட்சை நிலையங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், விசேட துப்புரவு வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியர் ஹரித அளுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...