சாதாரணதர பரீட்சை நாளை ஆரம்பம்: முஸ்லிம் மாணவிகளுக்கான அறிவித்தல்

Date:

நாளையதினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாணதரப் பரீட்சையில் பங்கேற்கும் அனைத்து முஸ்லிம் மாணவிகளுக்கும் பரீட்சை நிலையத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பில் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

சில பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் ஹிஜாப் அணிந்து பரீட்சை நிலையங்களுக்குள் பிரவேசிக்க முடியாது என்ற பொய்யான தகவல்கள்   பகிரப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஆணையாளர் நீல் அத்துகோரளவிடம் ‘நியூஸ் நவ்’ விசாரித்த போது,

2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பரீட்சை திணைக்களத்தின் வர்த்தமானி அறிவித்தலின் படி தேசிய அடையாள அட்டையில் காணப்படுவது போல  அனைத்து பரீட்சார்த்திகளும் தமது முகம் மற்றும் காதுகள் தெளிவாக தெரிவதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்தியின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் புளூடூத் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஹிஜாப் அணிவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அதனை காதுகளை திறந்து விடுவது கட்டாயம் எனவும் ஆணையாளர் நீல் அத்துகோரல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...