தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பான ஐ.தே.கவின் யோசனைக்கு கபே அமைப்பு கடும் எதிர்ப்பு!

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு கபே அமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை இரண்டு வருடங்களுக்கு காலம் தாழ்த்தி நடத்த வேண்டும் என ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார கடந்த செவ்வாய்க்கிழமை கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் கபே அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஜனநாயக ரீதியில், குறிப்பாக ஒரு ஜனநாயக அரசில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை சரியான நேரத்தில் நடத்துவது அவசியம்.

ஐ.தே.க பொதுச் செயலாளரின் கூற்றுப்படி, பொதுத்தேர்தல், மற்றும் ஜனாதிபதி பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்கள் நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்ற செயலாளரின் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், அரசாங்கம் ஏற்கனவே மாகாண சபைத் தேர்தலை தன்னிச்சையாக ஒத்திவைத்து, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்து, பூர்வாங்க வேலைகளை ஆரம்பித்து, அதற்காக கிட்டத்தட்ட 94 கோடி ரூபாவைச் செலவு செய்து, அதே தேர்தலை நடத்தாமல் ஜனநாயக விரோதமாகச் செயற்படுகிறது.

அதற்கிணங்க, அரசாங்கத்தின் அரசியலமைப்பின் பிரகாரம் குறித்த காலப்பகுதிக்குள் உரிய தேர்தலை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கஃபே அமைப்பு அன்பு  கேட்டுக்கொள்கின்றது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...