நவீன விவசாயத்தை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Date:

இலங்கையில் விவசாயம் மற்றும் வனப்பாதுகாப்பு திட்டத்திற்காக இணைந்து பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் காலநிலை மாற்ற செயலகம் சார்பாக ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி, காலநிலை இடர் மன்றத்தின் செயலாளர் நாயகம் மொஹமட் நஷிடி, போர்ச்சுகலின் (Navita Capital) இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கார்லோஸ் கோமஸ். நிறுவனம், கையெழுத்திட்டுள்ளது.

பண்ணை விளைச்சலையும் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிப்பதற்காக மேம்படுத்தப்பட்ட மற்றும் நிலையான விவசாய முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையின் கிராமப்புற சமூகங்களில் வீட்டு விவசாயத்தை மேம்படுத்துவது இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் 100 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டு அனுராதபுர மாவட்டத்தில் ஒரு முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படும்.

இதன் கீழ் 15,000 விவசாய குடும்பங்களுக்கு தேவையான ஆதரவும் தொழில்நுட்பமும் வழங்கப்படும்.

இந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு அனுராதபுரம் மாவட்டத்தில் 15,000 குடும்பங்களும் 15,000 ஏக்கரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் நவீன விவசாயத்தை உருவாக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்திற்கமைவாக, நவீன தொழில்நுட்பத்தை விவசாயத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிக்க போர்த்துகீசிய நிறுவனம் ஒன்று முதலீட்டாளராக முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...