நான்கு இலங்கையர்களுக்கும் ISISஉடன் தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் இல்லை: பொலிஸார் கைவிரிப்பு

Date:

பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கும் இடையே எந்தத் தொடர்பையும் புலனாய்வாளர்கள் கண்டறியவில்லையென பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்தியாவின் அகமதாபாத்தில் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையால் (ATS) மே 20 ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த மொஹமட் நுஷ்ரான், மொஹமட் நஃப்ரான் நவ்ஃபர், மொஹமட் ரஸ்டீன் அப்துல் ரசீம் மற்றும் மொஹமட் பாரிஸ் மொஹமட் ஃபாரூக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நால்வரும் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும் இந்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே ரஸ்தீன் மற்றும் பாரிஸ் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியான அப்துல் ஹமீட் அமீர் என்பவரும் விசாரணைக்காக  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மே 21 அன்று ஃபாரிஸ் மற்றும் அமீரின் வீடுகளில்  சோதனைகளை நடத்திய போதிலும், குறிப்பிடத்தக்க அல்லது சந்தேகத்திற்குரிய கண்டுபிடிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இதேபோல், மற்ற சந்தேக நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளும் இதுவரை ஐ.எஸ்.ஐ.எஸ் உடனான தொடர்புகளின் எந்த முடிவையும் தரவில்லை.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனால் நியமிக்கப்பட்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசேட குழுவொன்று உள்ளூர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...