பலஸ்தீன யுத்தத்தை நிறுத்துமாறு கோரி இன்று (17) கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டம் விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து பேரணியாக அமெரிக்க தூதரகம் வரை சென்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘போர் எதிர்ப்பிற்கான உலகளாவிய கூட்டணி, சுதந்திர பாலஸ்தீன இயக்கம்’, நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் தர்ம சக்தி அமைப்பின் பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தில் மனுவொன்றையும் கையளித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி, ராஜித சேனாரத்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.