பலத்த பாதுகாப்புடன் ‘மிதிகம’ ருவன் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்

Date:

பாதாள உலக கும்பலின் தலைவரும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய கடத்தல்காரருமான விதானகே ருவன் சாமர என்றழைக்கப்படும் “மிதிகம ருவன்” துபாயிலிருந்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இவர் துபாயில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (31) காலை இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மிதிகம ருவன் பாதாள குழு உறுப்பினரான ஹரக் கட்டாவின் மைத்துனராவார்.

துபாய் களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மிதிகம ருவன் அந்நாட்டு பொலிஸாரினால் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார். சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பட்டியலில் அவரது பெயர் இருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். துபாய் களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மிதிகம ருவன் அந்நாட்டு பொலிஸாரினால் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார். சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பட்டியலில் அவரது பெயர் இருந்தது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...