மாணவ குழுக்களுக்கிடையில் முரண்பாடு: பரீட்சை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களைத் தாக்கிய தாயார்!

Date:

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை வளாகத்திற்குள் நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரு மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகப் பாடசாலை சூழலில் பதற்றமான நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றிற்கு பிரிதொரு பாடசாலையிலிருந்து மாணவர்கள் சிலர் வருகைதந்துள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரு பாடசாலை மாணவ குழுக்களுக்கிடையிலும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பரீட்சை ஆரம்பித்த நாளிலிருந்து இருதரப்பினருக்குமிடையிலும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளதோடு, நேற்றைய தினம் மாணவரொருவரின் தாயொருவர் பரீட்சை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபரைக்கைது செய்து கடுமையாக எச்சரித்து பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...