வெசாக் தின தன்சல்களில் கூடுதல் பரிசோதனைகள்

Date:

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல்களில் வழங்கப்படும் உணவுகள் உண்பதற்குத் தகுதியற்றதாக இருப்பின், உடனடியாக அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகரிடம் தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

வெசாக் காலத்தில் நடத்தப்படும் தன்சல்கள் பொது சுகாதார பரிசோதகரால் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

அப்படி இருந்தும் சில தன்சல்கள் உரிய தரத்தில் பராமரிக்கப்படுவதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த வருடத்தை விட இவ்வருடம் கூடுதலான தன்சல்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தன்சல்கள் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தன்சல்களை நடத்த விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்து கொள்ளுமாறும் சங்கம் தெரிவிக்கிறது.

பதிவு செய்யும் போது, ​​பொது சுகாதார பரிசோதகர்கள், தன்சல்களை வழங்குவதில் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...