இலங்கையும் சவூதியும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Date:

உலகப் பொருளாதார மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் உலகின் பல நாடுகளது தலைவர்களும், அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பங்குபற்றி உள்ளார்.

இதன்போது சவூதி அரேபிய முதலீடுகள் அமைச்சர் காலித் அல் பாலிஹ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட நாள் தேவையாக இருந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் முதலீடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் இலங்கையின் தொழில் வல்லுனர்களையும் துறைசார் வல்லுனர்களையும் அமைச்சர் அலி சப்ரி  சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பஹன ஊடக நிறுவனத்தின் தலைவரான ஸெய்யித் சாலிம் மௌலானா அவர்களும்  கலந்துகொண்டார்.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...