இலங்கையும் சவூதியும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Date:

உலகப் பொருளாதார மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் உலகின் பல நாடுகளது தலைவர்களும், அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பங்குபற்றி உள்ளார்.

இதன்போது சவூதி அரேபிய முதலீடுகள் அமைச்சர் காலித் அல் பாலிஹ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட நாள் தேவையாக இருந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் முதலீடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் இலங்கையின் தொழில் வல்லுனர்களையும் துறைசார் வல்லுனர்களையும் அமைச்சர் அலி சப்ரி  சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பஹன ஊடக நிறுவனத்தின் தலைவரான ஸெய்யித் சாலிம் மௌலானா அவர்களும்  கலந்துகொண்டார்.

 

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...