இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்திய வர்த்தகருக்கு பிணை!

Date:

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட வர்த்தகரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபரான வர்த்தகர் இன்று (22) புதன்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாதீர இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இவர் கடந்த 18 ஆம் திகதி கொழும்பில் உள்ள பிரபல வர்த்தக வளாகமொன்றின் வாகன தரிப்பிடத்தில் வைத்து இலங்கைக்கான ஈரான் தூதுவரான அலிரேசா டெல்கோஷ் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...