இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதிய புத்தளம் மாணவன் மின்சார தாக்குதலில் பலி!

Date:

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி புத்தளம் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (30) காலை உயிரிழந்தார்.

புத்தளம் ஐந்தாம் குறுக்குத் தெருவில் வசித்து வந்த இம்மாணவர் 2024 இற்கான க.பொ.த. சாதாரண தரம் பரீட்சையை கடந்த மாதம் நிறைவு செய்திருந்தார்.

கடந்த வாரம் தனது வீட்டில் குளித்து விட்டு முடி உலர்த்தி மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே இவர் மின்சார தாக்குதலுக்குள்ளாகி புத்தளம் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவரது மரண விசாரணைகளை மேற்கொண்ட புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிசாம், மின்சாரம் தாக்குதலினால் ஏற்பட்ட மரணம் என தீர்ப்பளித்து ஜனாஸாவை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.

இவரது வியாழக்கிழமை  இரவு புத்தளம் பகா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

(புத்தளம் எம்.யூ.எம் சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

Popular

More like this
Related

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...

வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க...