ஈரான் ஜனாதிபதி பலி: உலகம் பாதுகாப்பானதாக மாறும்; அமெரிக்க அதிகாரியின் சர்ச்சைக் கருத்து!

Date:

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக இருக்கும் என புளோரிடாவின் அமெரிக்க செனட்டர் றிக் ஸ்கொற் (Rick Scott) தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் பலி ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் நீண்ட காலமாக பகை இருந்தது வருகின்றது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது.

இந்நிலையிலேயே, ஹெலிகாப்டர் விபத்தில் பலி ஈரான் ஜனாதிபதி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து றிக் ஸ்கொற் தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஈரான் ஜனாதிபதி ஒரு கொடுங்கோலன், அவர் நேசிக்கப்படவில்லை அல்லது மதிக்கப்படவில்லை.

அவர் உயிரிழந்துவிட்டால், கொலைகார சர்வாதிகாரிகளிடமிருந்து தங்கள் நாட்டை மீட்டெடுக்க ஈரானிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...