ஓமானில் இலங்கையர் மூவர் மர்மமான முறையில் உயிரிழப்பு: இருவர் கைது!

Date:

ஓமானில் Mabela Al Hain நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த இளைஞர்களுடன் தங்கியிருந்த ஏனைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறப்புக்கான காரணம் கண்டறியப்படாத போதிலும், மாரடைப்பு காரணமாக அவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஓமான் தூதரக அதிகாரிகளின் கூற்றுப்படி, உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மஹியங்கனை, கிரந்துருகோட்டே மற்றும் கேகாலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே ஓமானின் இலங்கை தூதரகம் வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல்களை வழங்குவதற்கான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...