கடும் மழை, பலத்த காற்று, கடல் சீற்றம்: சிவப்பு எச்சரிக்கை

Date:

கடும் மழை,  பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இன்று மாலை முதல் நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும்.

கொழும்பு தொடக்கம் காலி ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 60‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் அவ்வப்போது கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள்மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் .

எனவே, மீனவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை,தென்கிழக்கு அரபிக்கடலில் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் உள்ள கடற்படை மற்றும் மீனவர் சமூகத்தினருக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக்கான ஆலோசனையை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு கடற்பரப்புகளிலும் அடுத்த சில நாட்களில் கடும் மழையுடன் கூடிய பலத்த காற்று மேலும் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மறு அறிவித்தல் வரும் வரை கீழே உள்ள வரைபடத்தில் சிவப்பு நிறத்தால் குறிக்கப்பட்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...