கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின் வீட்டில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகக் கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும், தீ பரவலினால் ஏற்பட்ட சேதவிபரம் குறித்த தகவல் இது வரை வெளியாகவில்லை.