சில பொலிஸ் அதிகாரிகள் யுக்திய நடவடிக்கையை தவறாக பயன்படுத்துகிறார்கள்: எம்.பி.க்கள் குற்றச்சாட்டு

Date:

போதைப் பொருள் ஒழிப்புக்கான யுக்திய நடவடிக்கையை சில பொலிஸ் அதிகாரிகள் தவறாக பயன்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சிறு குற்றங்களுக்காக யுக்திய நடவடிக்கையின் கீழ் பாடசாலை சிறுவர்கள் உட்பட அப்பாவிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டியிருந்தனர்.

குருநாகல் மாவட்டத்தில் வீதிகளில் இருக்கும் இளைஞர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 54ன் கீழ் குற்றஞ்சாட்டப்படுவதால் பாரிய பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக சமன்பிரிய ஹேரத் தெரிவித்தார்.

நேற்று நாரம்மலாவில் நடந்த சண்டையில் பதினொரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒரு சிறுவனும் உள்ளடங்குவதாக அவர் கூறினார்.

நியாயமற்ற முறையில் நடந்து கொள்ளும் பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் சமன்பிரிய ஹேரத் வலியுறுத்தினார்.

இதேவேளை இதேபோன்ற சம்பவங்கள் பெரும்பாலான மாவட்டங்களில் பதிவாகியுள்ளதாகவும்இ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறிக்கொண்டு சட்டத்தை கையில் எடுப்பது தவறு எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் டோலவத்த தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...