டிப்ளோமாதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்க தீர்மானம்

Date:

500 டிப்ளோமாதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த நியமனம் வழங்கப்படும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

500 டிப்ளோமாதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் 100 பேரை தேசிய பாடசாலைகளுக்கும் ஏனைய 400 பேரை கிராமிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கும் என 500 ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி ரோஹிணி கவிரத்ன எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

 

ரோஹிணி கவிரத்ன எம்பி தமது கேள்வியின் போது இம்முறை ஆங்கில பாடத்தின் கேள்விகள் வழமையான முறைமைக்கு அப்பாற்பட்ட விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மத்திய மாகாணத்தில் பயிற்றுவிக்கப்பட்ட 5000 ஆங்கில பாட ஆசிரியர்களுக்கானவெற்றிடம் காணப்படுகிறது.
 

 

அதேபோன்று, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பாடசாலைகளில் இராணுவத்தினரே ஆங்கில பாடத்தை கற்பிக்கின்றார்கள்.

அது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மேற்கண்டவாறு பதிலளித்தார்.

 

Popular

More like this
Related

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...