பணயக்கைதிகளை விடுவிக்க கோரி டெல் அவிவில் ஒன்றுதிரண்ட பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள்

Date:

போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக பணயக்கைதிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்து பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல் அவிவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் “போர் புனிதமானது அல்ல, வாழ்க்கை” என்று கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சிலர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மோதலை நீடிப்பதை நோக்கமாக கொண்டுள்ளார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக காசாவில் இஸ்ரேலின் தாக்குதலை இடைநிறுத்துவது தொடர்பாக எகிப்து மற்றும் கத்தாரின் தூதுவர் கெய்ரோவில் நீண்ட கால பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் போது 40 நாட்கள் போர் இடைநிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பது குறித்து கலந்துரையாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...