பலஸ்தீன விவகாரத்தில் இலங்கையும் பாரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்: சபையில் மகிந்த

Date:

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றைய பாராளுமன்றஅமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றோம் பலஸ்தீன மக்கள் இன்று சொல்லொண்ணா துயரங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தியமைக்கு நான் இந்த உயரிய சபைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

பலஸ்தீன இலங்கை ஒத்துழைப்பு அமைப்பின் ஊடாக எம்மால் அந்த மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடிந்தது.

பலஸ்தீனில் அமைதியை நிலைநாட்டுவதற்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி செயற்பட வேண்டும். இஸ்ரேலிய தாக்குதலினால் மில்லியன் கணக்கான மக்கள் வெளியேறியுள்ளனர். கடந்தவாரத்தில் மாத்திரம் 50 லட்சம் பலஸ்தீன மக்கள் வெளியேறியுள்ளனர்.

பலஸ்தீன விவகாரம் தொடர்பாக உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் நாடு என்ற ரீதியில் இலங்கையும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அதேபோன்று பலஸ்தீன மக்களுக்கான நிவாரணங்களை தொடந்தும் வழங்க வேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...