பலஸ்தீன யுத்தத்தை நிறுத்துமாறு கோரி கொழும்பில் அமைதி பேரணி

Date:

பலஸ்தீன யுத்தத்தை நிறுத்துமாறு கோரி இன்று (17) கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டம் விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து பேரணியாக  அமெரிக்க தூதரகம் வரை சென்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘போர் எதிர்ப்பிற்கான உலகளாவிய கூட்டணி, சுதந்திர பாலஸ்தீன இயக்கம்’, நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் தர்ம சக்தி அமைப்பின் பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தில் மனுவொன்றையும் கையளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி, ராஜித சேனாரத்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...