பலஸ்தீன யுத்தத்தை நிறுத்துமாறு கோரி கொழும்பில் அமைதி பேரணி

Date:

பலஸ்தீன யுத்தத்தை நிறுத்துமாறு கோரி இன்று (17) கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டம் விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து பேரணியாக  அமெரிக்க தூதரகம் வரை சென்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘போர் எதிர்ப்பிற்கான உலகளாவிய கூட்டணி, சுதந்திர பாலஸ்தீன இயக்கம்’, நாட்டில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபடும் தர்ம சக்தி அமைப்பின் பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தில் மனுவொன்றையும் கையளித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி, ராஜித சேனாரத்ன ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...