பலத்த பாதுகாப்புடன் ‘மிதிகம’ ருவன் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்

Date:

பாதாள உலக கும்பலின் தலைவரும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய கடத்தல்காரருமான விதானகே ருவன் சாமர என்றழைக்கப்படும் “மிதிகம ருவன்” துபாயிலிருந்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இவர் துபாயில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (31) காலை இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மிதிகம ருவன் பாதாள குழு உறுப்பினரான ஹரக் கட்டாவின் மைத்துனராவார்.

துபாய் களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மிதிகம ருவன் அந்நாட்டு பொலிஸாரினால் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார். சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பட்டியலில் அவரது பெயர் இருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். துபாய் களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மிதிகம ருவன் அந்நாட்டு பொலிஸாரினால் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார். சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பட்டியலில் அவரது பெயர் இருந்தது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...