பலத்த பாதுகாப்புடன் ‘மிதிகம’ ருவன் துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்

Date:

பாதாள உலக கும்பலின் தலைவரும் சர்வதேச போதைப்பொருள் வலையமைப்புடன் தொடர்புடைய கடத்தல்காரருமான விதானகே ருவன் சாமர என்றழைக்கப்படும் “மிதிகம ருவன்” துபாயிலிருந்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இவர் துபாயில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (31) காலை இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மிதிகம ருவன் பாதாள குழு உறுப்பினரான ஹரக் கட்டாவின் மைத்துனராவார்.

துபாய் களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மிதிகம ருவன் அந்நாட்டு பொலிஸாரினால் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார். சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பட்டியலில் அவரது பெயர் இருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். துபாய் களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மிதிகம ருவன் அந்நாட்டு பொலிஸாரினால் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தார். சர்வதேச பொலிஸாரின் சிவப்பு பட்டியலில் அவரது பெயர் இருந்தது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...