இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் உருவாகியுள்ள தளம்பல் நிலைமை காரணமாக, நாடு முழுவதும் தொடர்ச்சியாக மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இன்றையதினம் (14) நாட்டின் பல பகுதிகளில், பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
கிழக்கு, ஊவா, மத்திய, தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும் .
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கக் கூடும்.
பலத்த காற்று மற்றும் மின்னலினால் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்