மாணவ குழுக்களுக்கிடையில் முரண்பாடு: பரீட்சை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களைத் தாக்கிய தாயார்!

Date:

கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை வளாகத்திற்குள் நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரு மாணவ குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகப் பாடசாலை சூழலில் பதற்றமான நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றிற்கு பிரிதொரு பாடசாலையிலிருந்து மாணவர்கள் சிலர் வருகைதந்துள்ள நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) இரு பாடசாலை மாணவ குழுக்களுக்கிடையிலும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பரீட்சை ஆரம்பித்த நாளிலிருந்து இருதரப்பினருக்குமிடையிலும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளதோடு, நேற்றைய தினம் மாணவரொருவரின் தாயொருவர் பரீட்சை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களைத் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபரைக்கைது செய்து கடுமையாக எச்சரித்து பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...