ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் கைது !

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 36 வயதுடைய ஆசிரியர் என்பதுடன் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்  இதுவரை 25 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் இச் சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி இரவு அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரது வீட்டுக்கும் சொத்துக்களுக்கும் தீயிட்டுச் சேதப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...

காற்றழுத்தம் நீடிக்கிறது: நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழை

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, நாட்டின் கடற்பகுதியில் தொடர்ந்து...

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...