வாகன இறக்குமதிக்கு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

Date:

வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுவதைக் காரணம் காட்டி தமக்குத் தேவையான வாகனங்களை கொண்டுவர அமைச்சர்கள் தயாராகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் பிரசாத் மானகே இதனை தெரிவித்தார்.

 

வாகன இறக்குமதித் துறையில் நிலவும் பிரச்சனைகள் காரணமாக இதுவரை 50% – 60% மக்கள் தொழிலை கைவிட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

வாகனங்கள் இறக்குமதி தொடர்பாக 4 வருடங்களாக காத்திருக்கிறோம் என்றும் விரைவில் கொண்டு வருவோம் என்கிறார்கள்.

ஆனால் இதுவரை ஏற்றுமதி செய்யப்படவில்லை. நாங்கள் வாகனங்களை இறக்குமதி செய்யும்போது, ​​அரசாங்கம் 200% வரி விதிக்கிறது.

நாங்கள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் கலந்துரையாடினோம்.  முதலில் பஸ், லொறி போன்ற வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதத்தைப் பார்த்துவிட்டு அதனை செய்வோம் என தெரிவித்தார்.

மேலும் இதனைக் காரணம் காட்டி அமைச்சர்களுக்குத் தேவையான வாகனங்களைக் கொண்டுவர ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏனெனில் அண்மையில் அமைச்சர்கள் சபாநாயகரிடம் வாகனங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...