வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற ஏனைய அமைச்சர்கள்: பதவி நீக்கப்படுவார்களா?

Date:

மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் குடியுரிமை பெற்ற அமைச்சர்கள் சுமார் 10 பேர் மற்றும் அரச சேவையில் உயர்நிலை அதிகாரிகள் சுமார் 200 பேர் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளதாக  சிங்கள பத்திரிகையான ‘லங்காதீப‘ செய்தி வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமைச்சர்களுள் அநேகமானோர் தமிழர்கள் எனவும் அச் செய்தியில் சுட்டிக்காட்ப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள ஏனைய அமைச்சர்களுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் மனு தாக்கல் செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக சில சிவில் அமைப்புகள் நேற்று (12) தெரிவித்திருந்தன.

இவர்களின் குடியுரிமை தொடர்பில் இதுவரையில் எவரும் கேள்வியெழுப்பவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

எவரேனும் கேள்வியெழுப்பினால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் உத்தரவு கிடைக்கும் வரையில் மாத்திரம் அவர்களுக்கு அந்தந்த பதவிகளை வகிக்க முடியும் என நீதித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனினும், நீதிமன்றின் முன்னிலையில் அமைச்சர்களின் இரட்டை குடியுரிமையை தெளிவாக நிரூபிக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

இரட்டை குடியுரிமையைப் பெற்றுக் கொண்டுள்ள அரச அதிகாரிகளுள் வெளிநாட்டு தூதரகங்களில் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் காணப்படுபவர்கள் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

வெளிநாட்டுக் குடியுரிமையைப் பெற்ற கீதா குமாரசிங்க மற்றும் டயானா கமகே போன்றோரின் அமைச்சுப் பதவிகள் நீண்ட விசாரணைகளின் பின்னர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் கீழ் பதவி நீக்கப்பட்டனர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிலையாகும் முன் அமெரிக்கக் குடியுரிமையை சட்டரீதியாக நீக்கிக்கொண்டார்.

பசில் ராஜபக்ச இரட்டை குடியுரிமை தொடர்பில் அரசியல் வட்டாரங்களில் அதிகளவில் பேசப்பட்டாலும், அவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் அந்தப் பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...