2,100 கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கிவைப்பு

Date:

டிசம்பர் 2, 2023 வரை நடத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் பரீட்சையைத் தொடர்ந்து, கிராம சேவையாளர் பதவிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் 2,100 பேருக்கு நியமன கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன.

இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புதிய கிராம சேவையாளர் நியமனங்கள் இடம்பெற்றன.

பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு கிராம சேவை உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டது.

குறைந்த வருமானம் பெறும் மக்களை மேம்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள ‘அஸ்வசும’ மற்றும் ‘உறுமய’ போன்ற வேலைத்திட்டங்கள் குறித்து புதிய கிராம அதிகாரிகளிடம் தெரிவித்த ஜனாதிபதி தமது பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்திக்காக இந்த திட்டங்களில் தீவிரமாக இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...