600,000 மாணவர்கள் காலை சாப்பாடு இன்றி பாடசாலைக்கு வருகின்றார்கள்!

Date:

600,000 பாடசாலை மாணவர்கள் காலை சாப்பாடு இன்றி பாடசாலைக்கு வருவதாக பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு வெளிப்படுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் பாடசாலைக்கு சிறுவர்களின் வருகை அதிகரித்துள்ளதாகவும் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ஆரம்ப தரத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை வழங்குமாறு கல்வி அமைச்சுக்கு குழு அறிவித்துள்ளது.

அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுக்காக வருடாந்தம் 1600 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவி வழங்க விரும்பும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு முறையான முறைமை ஒன்றைத் தயாரிப்பதற்கும் குழு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் யுத்த நிறுத்த மீறல்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கொலை!

காசா நகரின் ஸைத்தூன் பகுதியில் உள்ள தங்களது வீட்டை புனரமைக்கும் முயற்சியில்...

செவ்வந்தியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

நேபாளத்தில் இருந்து அண்மையில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல...

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி இன்னும் ஆரம்பக்கட்ட பரிசோதனை நிலையிலேயே உள்ளது: சுகாதார அமைச்சு

ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி 'என்டோரோமிக்ஸ்' (Enteromix) தொடர்பான பரபரப்பான கூற்றுகளுக்கு எதிராக...

மார்பக புற்று நோயால் ஒரு நாளைக்கு மூவர் உயிரிழப்பு!

இன்றைய காலகட்டத்தில் உலகளாவிய ரீதியில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்று நோயினால்...