ஈரான் ஜனாதிபதியின் மறைவு பேரதிர்ச்சி: மஹிந்த இரங்கல்

Date:

ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ  இன்று திங்கட்கிழமை (20) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை கேள்வியுற்று இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு ஈரானிய தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் சந்தித்து இரங்கலை தெரிவித்ததோடு, இரங்கல் புத்தகத்தில் குறிப்பொன்றையும் பதிவிட்டுள்ளார்.

ஹெலிக்கொப்டர் கோர விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும்  அவருடன் சென்ற பல மூத்த  அதிகாரிகள் உயிரிழந்தமை ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரைசி இலங்கையின் உண்மையான நண்பராக இருந்தார். ஈரான் மக்கள் மீது அவர் கொண்ட தலைமைத்துவமும் அர்ப்பணிப்பும் என்றும் நினைவுகூரப்படும்  என எக்ஸ் தளத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...