ஈரான் ஜனாதிபதியின் மறைவு பேரதிர்ச்சி: மஹிந்த இரங்கல்

Date:

ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ  இன்று திங்கட்கிழமை (20) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை கேள்வியுற்று இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு ஈரானிய தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் சந்தித்து இரங்கலை தெரிவித்ததோடு, இரங்கல் புத்தகத்தில் குறிப்பொன்றையும் பதிவிட்டுள்ளார்.

ஹெலிக்கொப்டர் கோர விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும்  அவருடன் சென்ற பல மூத்த  அதிகாரிகள் உயிரிழந்தமை ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரைசி இலங்கையின் உண்மையான நண்பராக இருந்தார். ஈரான் மக்கள் மீது அவர் கொண்ட தலைமைத்துவமும் அர்ப்பணிப்பும் என்றும் நினைவுகூரப்படும்  என எக்ஸ் தளத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்க முடியும்: சுங்கத் திணைக்களம்

நாட்டில் நாணயக் கடிதங்களை திறந்து உற்பத்தி செய்யப்பட்ட நாடு அல்லாத வேறு...

செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு பணிகளுக்காக 1.9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுக்கு 1.9...

இலங்கையின் மோசமான வரிக்கொள்கை குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை!

இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியில் முக்கிய...

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...