ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய, அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் M.H.M.அஷ்ரப் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக “அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
M.H.M.அஷ்ரபின் 24 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர் H.M.M.ஹரீஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க, M.H.M.அஷ்ரபின் பிறந்த ஊரான கல்முனையில் இந்த நினைவு அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்காக 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கான நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.