இலங்கைக்கான புதிய துருக்கி தூதுவர் நியமனம்

Date:

இலங்கைக்கான துருக்கி தூதுவராக செமிஹ் லுட்ஃபு துர்குட் (Semih Lütfü Turgut) (52)  நியமிக்கப்பட்டுள்ளார்.

துருக்கி ஜனாதிபதி தையிப் அர்தூகானால் இந்த நியமனம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கான துருக்கி தூதுவராக செயற்பட்ட திருமதி ராகிபே டெமெட் செகெர்சியோகுளு அண்மையில் தனது பதவிக் காலத்தினை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பியுள்ளார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இலங்கைக்கான துருக்கியின் நான்காவது தூதுவராக  இவர் நியமிக்கப்பபட்டுள்ளார்.

ஸ்கொட்லாந்தின் தலைநகரான எடின்பேர்கிற்கான துருக்கியின் முதலாவது கொன்சியூலர் ஜெனரலாக இவர் சுமார் ஐந்து வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.

துருக்கியின் வெளிநாட்டு சேவையில் சிரேஷ்ட அதிகாரியான இவர், பல நாடுகளிலுள்ள துருக்கி தூதுவராலயத்திலும் துருக்கி வெளிநாட்டு அமைச்சிலும் கடமையாற்றியுள்ளார்.

பல்வேறு இராஜதந்திர பதவிகளை வகித்த இவர் முதற்தடவையாக தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...