இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவுகளைத் திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும்: ஹக்கீம்

Date:

காசா மீதான இராணுவத் தாக்குதல்களை நிறுத்தத் தவறினால், இஸ்ரேலுடனான தூதரக உறவுகளைத் திரும்பப் பெறுவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி ரவூப் ஹக்கீம் இன்று வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய தினம் பலஸ்தீன விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலை அச்சுறுத்தி, காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் இலங்கை இராஜதந்திர உறவுகளை விலக்கிக்கொள்ளும் என்றும் கடைசி முயற்சியாக இதை செய்யுங்கள்” என்று ஹக்கீம் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்..

இதற்கு பதிலளித்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது அனைத்து நாடுகளுடனும் உறவுகளை ஏற்படுத்துவதும் பேணுவதும் ஆகும்.

“அனைத்து நாடுகளுடனும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும், பேணுவதும்தான் எங்களின் வெளியுறவுக் கொள்கை. இருப்பினும், பலஸ்தீனத்தை நாங்கள் கைவிட்டுவிட்டோம் என்று அர்த்தமில்லை” என்று அவர் கூறினார்.

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...