ஈரான் ஜனாதிபதியின் மறைவையொட்டி கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் பிரார்த்தனை! (photos)

Date:

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்ற அனுதாப நிகழ்வின் போது இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் கண்ணீருடன் பிரார்த்தனை செய்தார்.

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் அப்துல்லாஹியான் உட்பட உயரதிகாரிகளுக்கான பிரார்த்தனை நிகழ்வொன்று கொள்ளுப்பிட்டி ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது.

வெளிவிவகார அமைச்சும் ஈரான் தூதுவராலயமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய,  ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ்,  தூதுவராலய அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம் பௌசி, முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், விஷேட பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

(photos: dailymirror)

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...