சாதாரணதர பரீட்சை நாளை ஆரம்பம்: முஸ்லிம் மாணவிகளுக்கான அறிவித்தல்

Date:

நாளையதினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாணதரப் பரீட்சையில் பங்கேற்கும் அனைத்து முஸ்லிம் மாணவிகளுக்கும் பரீட்சை நிலையத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பில் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

சில பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் ஹிஜாப் அணிந்து பரீட்சை நிலையங்களுக்குள் பிரவேசிக்க முடியாது என்ற பொய்யான தகவல்கள்   பகிரப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஆணையாளர் நீல் அத்துகோரளவிடம் ‘நியூஸ் நவ்’ விசாரித்த போது,

2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பரீட்சை திணைக்களத்தின் வர்த்தமானி அறிவித்தலின் படி தேசிய அடையாள அட்டையில் காணப்படுவது போல  அனைத்து பரீட்சார்த்திகளும் தமது முகம் மற்றும் காதுகள் தெளிவாக தெரிவதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்தியின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் புளூடூத் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஹிஜாப் அணிவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அதனை காதுகளை திறந்து விடுவது கட்டாயம் எனவும் ஆணையாளர் நீல் அத்துகோரல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...