சீரற்ற வானிலை : பாடசாலைகள் குறித்த அறிவிப்பு!

Date:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புத்தளம் மாவட்டமே இதுவரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் 20, 21 ஆம் திகதிகள் மூடப்பட்டிருந்த போதிலும் நாளை 22 ஆம் திகதி வழமை போன்று மீண்டும் திறக்கப்படும் என பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பேரிடர் பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்படுமா? இல்லை? என்பதை பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...