டிப்ளோமாதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்க தீர்மானம்

Date:

500 டிப்ளோமாதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த நியமனம் வழங்கப்படும் என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

500 டிப்ளோமாதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை தற்போது இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் 100 பேரை தேசிய பாடசாலைகளுக்கும் ஏனைய 400 பேரை கிராமிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கும் என 500 ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி ரோஹிணி கவிரத்ன எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

 

ரோஹிணி கவிரத்ன எம்பி தமது கேள்வியின் போது இம்முறை ஆங்கில பாடத்தின் கேள்விகள் வழமையான முறைமைக்கு அப்பாற்பட்ட விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் மத்திய மாகாணத்தில் பயிற்றுவிக்கப்பட்ட 5000 ஆங்கில பாட ஆசிரியர்களுக்கானவெற்றிடம் காணப்படுகிறது.
 

 

அதேபோன்று, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில பாடசாலைகளில் இராணுவத்தினரே ஆங்கில பாடத்தை கற்பிக்கின்றார்கள்.

அது தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த மேற்கண்டவாறு பதிலளித்தார்.

 

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...