பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவருக்கு பிரியாவிடை!

Date:

தமது பதவிக் காலம் முடிந்து நாடு திரும்பும் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் பி.எம் ஹம்சா அவர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு நேற்று ரியாத்தில் இடம்பெற்றது.

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை சமூகம் சார்பில், ரியாத்தில் உள்ள ஹொலிடே இன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பௌத்த, இந்து,கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் தூதுவருக்குப் பாராட்டுத் தெரிவித்ததுடன் சினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தூதுவர் பி.எம். அம்சா இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் 29 வருடங்களுக்கும் மேலான இராஜதந்திர அனுபவத்துடன் இலங்கை வெளிநாட்டு சேவையின் (SLFS) உறுப்பினராவார்.

நவம்பர் 2021 இல் சவூதி  அரேபியாவுக்கான இலங்கையின் தூதுவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, அவர் ஜூலை 2019 முதல் அக்டோபர் 2021 வரை பொருளாதார விவகார அமைச்சில் கூடுதல் செயலாளராக பணியாற்றினார்.

ஜனவரி 2016 முதல் ஜூன் 2019 வரை ஜோர்ஜியா மற்றும் உக்ரைனுக்கான துருக்கி குடியரசின் இலங்கைத் தூதுவராகவும், ஆகஸ்ட் 2012 முதல் ஜூலை வரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவராகவும் பணியாற்றினார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...