புத்தளத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவு: சமூக நல பணியாளர்கள் களத்தில்

Date:

புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக புத்தளத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் நேற்று (18) இரவு முதல் பெய்து வரும் கடும் மழையினால் புத்தளம் பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகளான கடையாக்குளம், தில்லையடி, ரத்மல்யாய, முள்ளிபுரம் பாலாவி உள்ளிட்ட பல பிரதேசஙகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

அதேபோல புத்தளம் தள வைத்தியசாலை தொடர்ந்து பெய்து வரும்‌ கன மழையால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்குவதில் புத்தளம் வாழ் சமூக நல பணியாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

புத்தளம் ஐ.பீ.எம்.மண்டபத்தில் புத்தளம் முன்னாள் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் தலைமையில் தொண்டர் அமைப்பினர், இளைஞர் அமைப்பினர் ஒன்று கூடி உணவு சமைப்பதில் இறங்கினர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...