மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மதத் தலைவர்களின் மாநாடு: (photos)

Date:

மலேசியா (Malaysia) கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச மதத் தலைவர்கள் மாநாடு கடந்த மே 8 ஆம் திகதி நிறைவடைந்தது.

குறித்த  மாநாட்டில் 57 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2-ஆயிரம் மதப் பிரமுகர்கள் மற்றும் அறிவுஜீவிகள் பங்கேற்றனர்.

ஐந்து நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் இலங்கையில் இருந்து சென்ற அணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பலீல் தலைமையிலான சர்வமதக் குழு தலைமை தாங்கியது.

இந்த மாநாடானது உலகெங்கிலும் உள்ள மதத் தலைவர்களிடையே அமைதி, நல்லிணக்கம் மற்றும் வேற்றுமைக்குள் ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு நடைபெற்றது.

மாநாட்டில்  சிறப்புரையாற்றிய மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பின் இப்ராஹிம்,

நீதியான சமூகத்தை கட்டியெழுப்புவதில் சமய நல்லிணக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.

அரசியல் முரண்பாடுகள் மீதான பொது விரக்தியின் மத்தியில் நீதியை மேம்படுத்துவதில் இன்னும் உறுதியான பங்கை எடுக்குமாறு அவர்களை வலியுறுத்தினார்.

மதத் தலைவர்கள் தார்மீகக் கொள்கைகளை நிலைநிறுத்தவும், முன்மாதிரியாக வழிநடத்தவும், அவர்களைப் பின்பற்றுபவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், இந்து சமூகங்களுக்கு தேவையான முன்னேற்றங்களுக்கு குரல் கொடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மலேசிய மத விவகார அமைச்சர் நைம் மொக்தார், மிகவும் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட  ஒற்றுமையின் மதிப்புகளை ஒன்றிணைக்கும் நோக்கில் பகிரப்பட்ட நாகரீகத்தை உருவாக்குவது பற்றி பேசினார்.

மேலும் சமயங்களுக்கிடையிலான உரையாடலின் அவசியத்தையும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர்  எடுத்துரைத்தார்.

“இந்த சர்வதேச மாநாட்டில் சர்வதேச, மத, அரசியல், அறிவுஜீவி, கல்வி மற்றும் ஊடகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...