அருள் மழையில் நனையும் ஹாஜிகள்:மழையையும் பொருட்படுத்தாது தவாப் செய்கின்ற ஒர் அருமையான காட்சி

Date:

துல் ஹஜ் 11ஆவது நாளான இன்று மக்காவில் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெப்ப நிலைமை 50 டிகிரியை தாண்டியிருக்கின்ற நிலையில் அங்கு மழை பொழிய ஆரம்பித்துள்ளது.

அல்லாஹ்வின் அருள் கடும் உஷ்ணத்ததோடு ஹஜ் செய்கின்ற மக்களுக்கு இறங்கிய ஒரு உணர்வை இந்த மழை ஏற்படுத்தியிருக்கிறது.

கஅபாவைச் சூழ தவாப் செய்து கொண்டிருக்கின்ற மக்கள் அந்த மழையையும் பொருட்படுத்தாது தவாப் செய்கின்ற அந்த அருமையான காட்சி இந்த வீடியோவில் காண்பிக்கப்படுகின்றது.

மக்காவில் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போது இருக்கின்ற கடும் வெப்ப நிலைமை 50 டிகிரியை தாண்டியிருக்கின்ற நிலையில் இது வரைக்கும் 20 பேர் வரை மரணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று மக்காவில் மழை பெய்திருக்கின்ற செய்தி அங்கிருக்கின்ற மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகிருக்கின்றது.

கஅபாவை சூழ தவாப் செய்கின்ற மக்கள் மழையில் நனைந்தவாறு தங்களுடைய கடமையான தவாப் செய்கின்ற காட்சியானது அவர்கள் எவ்வளவு தூரம் அந்த உஷ்ணத்தை தாங்கிக்கொண்டு மழை எதிர்ப்பார்த்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...