இராணுவ ரீதியிலான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அல் அக்ஸா புனித பள்ளிவாசலில் இடம்பெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

Date:

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதஸ்தலமாகக் கருதப்படுகின்ற பலஸ்தீனத்தில் அமைந்திருக்கின்ற அல் அக்ஸா பள்ளிவாசல் இஸ்ரேலினுடைய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்து வருகின்றது.

இஸ்ரேல் தன்னுடைய ஆக்கிரமிப்பின் கீழ் இப்பள்ளிவாசலின் புனிதத்தன்மையை பாதிக்கின்ற வகையில் பல்வேறு நாசகார செயல்களை செய்து வருகின்றதை ஊடகங்களில் அடிக்கடி காணுகின்ற விடயம்.

இருந்தபோதிலும் பலஸ்தீனத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களுடைய புனித பூமியை பாதுகாக்கும் வகையிலும் அந்த பள்ளிவாசலில் தொழுவதால் கிடைக்கும் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும் பல்வேறு இராணுவ ரீதியிலான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அப்பள்ளிவாசல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்கின்றனர்.

அந்தவகையில் ஹஜ் பெருநாள் தொழுகையும் அல்அக்ஸா பள்ளிவாலில் இடம்பெற்ற போது பல்லாயிரக்கணகான பலஸ்தீன முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருப்பதை அல்ஜஸீரா ஊடகம் வெளியிட்டிருந்ததை இந்த காணொளி காட்டுகின்றது.

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...