ஐ.நா. புகலிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 40க்கும் மேற்பட்டவர்கள் பலி; கலங்கி போன காசா

Date:

240 நாட்களை கடந்து இஸ்ரேல் – காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் தொடர்ந்து வருகிறது.

இதில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரிதும் அதிர்ச்சியை அளித்து வருகிறது.

இஸ்ரேல், காசா என இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் பலஸ்தீனிய மக்களின் நிலை தான் மிகவும் மோசம்.

காசாவில் கடைசி நம்பிக்கையாக இருந்த ரஃபா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த முகாமில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் பதுங்கியிருந்ததாக கூறி வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆனால் இஸ்ரேலின் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட அப்பாவி பலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி இஸ்ரேல் ராணுவத் தரப்பினர் கூறுகையில், உளவுத்துறை மூலம் எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அந்த பள்ளியில் ஹமாஸ் அமைப்பினர் பலரும் மறைந்திருந்தனர். இதுதொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களையும் ஆய்வு செய்தோம். எனவே தான் தாக்குதலை தொடுத்தோம் என்று தெரிவித்தனர்.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணம் மற்றும் வேலை சார் ஏஜென்சி (UNRWA) தலைவர் பிலிப்பீ லஸ்ஸாரினி கூறுகையில், அந்த பள்ளி ஐ.நா சபையின் பலஸ்தீனிய அகதிகள் ஏஜென்சியால் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல் போரால் இடம்பெயர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் இந்த முகாமில் தான் தஞ்சமடைந்திருந்தனர்.

உள்ளே ஹமாஸ் அமைப்பினர் இருந்தார்களா என்று தெரியவில்லை. அதேசமயம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் படி, ஐ.நா கட்டடங்களை இராணுவ நடவடிக்கைகளுக்காக தாக்குவது அல்லது குறிவைப்பது, பயன்படுத்துவது தவறானது என்று தெரிவித்தார். 

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...