கொரோனாவால் மரணித்தவர்களை எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் முஸ்லிம்களை இலக்குவைத்து எடுக்கப்பட்ட இனவாத தீர்மானம்: சஜித்

Date:

கொவிட் தொற்றில் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில், அப்போது இருந்த அரசாங்கம் முஸ்லிம் மக்களை இலக்காகக்கொண்டு இனவாத அடிப்படையில்  செயற்பட்டு சடலங்களை எரிப்பதற்கு தீர்மானித்திருந்தது என எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையில், கொவிட் தொற்றில் மரணித்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் போன்று எதிர்காலத்தில் அவ்வாறான பிழையான தீர்மானங்களை தவிர்க்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த கருத்து தொடர்பில் குறிப்பிடுகையிலேயே சஜித்  இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

கொவிட் தொற்றில் மரணிக்கும் சடலங்களை எதிர்க்கவேண்டும் என அப்போது இருந்த அரசாங்கம் விசேட நிபுணர்கள் குழுவொன்றை நியமித்து எடுத்த நடவடிக்கை, அரசியல் வரலாற்றில் முஸ்லிம் இனத்தவர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட மிகவும் மோசமான இனவாத செயற்பாடாகும்.

கொவிட் தொற்றில் மரணிக்கும் சடலங்களை நடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில் அரசாங்கம் எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் மிகவும் கீழ்த்தரமான செயல்.

எமது நாட்டின் முஸ்லிம் மக்களின் உரிமையை மீறி இவ்வாறு சடலங்களை எரிக்க எடுத்த தீர்மானம் அடிப்படை உரிமையை மீறும் செயல். இது ஒரு இனத்தை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை. இந்த நடவடிக்கைக்கு எதிராக அ்ப்போது இருந்து அரசாங்கத்தின் மிக மோசமான இந்த தீர்மானத்துக்கு எதிராக ஆரம்பமாக வீதிக்கு இறங்கி போராடியது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியாகும்.

அதனால் நாட்டின் ஒரு இனத்துக்கு மாத்திரம் எதிராக திட்டமிட்டு, இனவாதமாக செயற்படும் வகையில், கொவிட் தொற்றில் மரணித்தவர்களை எரிக்க வேண்டும் என தீர்மானம் மேற்கொண்டவர்கள் யார் என்பதை தேடிப்பார்த்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

 

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...