கொடூரமாக தாக்கப்பட்ட சிறுவன்: சந’தேகநபர் வெளிஓயாவில் கைது

Date:

சிறுவன் ஒருவன் கொடூரமான முறையில் மிகவும் மூர்க்கத்தனமாக தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிஓயா பொலிஸார், முல்லைத்தீவு பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் இணைந்து இன்று (05) அதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் போதே சந்தேக நபர்கள கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது தாக்குதலுக்குள்ளான சிறுவனும் இவர்களுடன் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவன் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, சிறுவனின் தந்தை என கருதப்படும் 45 வயதுடைய ஆண் ஒருவரும், 46 மற்றும் 37 வயதுடைய பெண்கள் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் வெலிஓயா பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...