சர்வ ஜன பலய கூட்டணியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர்: பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்

Date:

விமல் வீரவன்சவை மையப்படுத்திய சர்வ ஜன பலய கூட்டணி ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முன்னெடுக்க தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை முன்வைப்பதாகவும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார்.

காலி மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இடதுசாரி தேசியவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை மக்களின் முதன்மையான மாற்றமாக ‘சர்வ ஜன பலய’ கூட்டணி உருவெடுத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

இடதுசாரி தேசியவாதத்தை ஆதரிக்கும் ஒரே அரசியல் குழு தனது கூட்டணி என்று கூறிய அவர், மற்ற அனைத்து கட்சிகளும் வலதுசாரி என்ற பதாகையின் கீழ் ஒன்றுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க ஆகிய அனைவரும் அதனை கடைப்பிடிப்பதாகவும், தமது கூட்டணி மக்களுக்கு தனித்துவமான மாற்றீட்டை வழங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் பிரச்சாரங்களை விரைவில் ஆரம்பிக்க சர்வ ஜன பலய கூட்டணி தயாராக இருப்பதாகவும், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் பெயரிடப்படுவார் எனவும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...