சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு!

Date:

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் 10 நாட்களில் வெளியாகுமென வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை பெறுபேறுகளே வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, பொதுத் தகவல் தொழில்நுட்பம் என்பதற்குப் பதிலாக கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை கடந்த மே மாதம் 6ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெற்றது.

3,527 பரீட்சை மத்திய நிலையங்களில், 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

இதில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரிகளும், 65,331 தனியார் விண்ணப்பதாரிகளும் பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

காசா மக்களின் அவலத்தை வெளிப்படுத்தும் சர்வதேச விருது பெற்ற ‘ஹிந்த் ரஜப்’ திரைப்படம் இலங்கையில் திரையிடப்படுகிறது!

சர்வதேச அளவில் மிகப்பிரபலமான விருதைத் தட்டிக்கொண்டதும், காசா மக்களின் துன்பங்களையும் துயரங்களையும்...

17 சுகாதார நிறுவனங்களுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்

சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எந்தவொரு அரசியல் இலாபத்திற்காகவோ அல்லது...