நாட்டில் கணனி அறிவாற்றல் வீதம் அதிகரிப்பு!

Date:

நாட்டில் கணனி அறிவாற்றல் 39 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு கணனி கல்வியறிவு கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இலங்கையில் 5 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட  ஐவரில் இருவர் கணினி அறிவு பெற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐவரில் மூவருக்கு டிஜிட்டல் கல்வியறிவு உள்ளதுடன் இது 63.5 வீதம் எனவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டளவில், கணினி கல்வியறிவு 4.7 வீதமாக அதிகரித்துள்ளதுடன்  நகர்ப்புறங்களில் கணினி கல்வியறிவு 52.9 வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் அதிக கணினி அறிவைக் கொண்ட மக்கள் உள்ளதுடன், கிழக்கு மாகாணத்தில் மிகக் குறைந்த கணினி அறிவைக் கொண்ட மக்கள் இருப்பதாக தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...