பாதியில் நிறுத்தப்பட்ட ஜப்பானிய திட்டங்கள் இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்கப்படும்!

Date:

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள இலங்கை பாதியில் நிறுத்தப்பட்ட ஜப்பானிய திட்டங்களை இலங்கையில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்

இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதற்கு இலங்கை தனது பாராட்டுக்களை தெரிவித்ததாகக் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு ஜப்பான் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் எனவும் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை மீளப் பெறுவதற்கும் இது ஒரு முக்கியமான மைல்கல் என்றும் அவர் கூறினார்

மேலும் இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்க ஜப்பான் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானவுடன், இந்த நாட்டில் ஜப்பானிய திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கான நிதியைப் பயன்படுத்துவதை விரைவுபடுத்த முயற்சிப்பதொடு நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜப்பான் இலங்கையை முழுமையாக ஆதரிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...