பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

Date:

ஐக்கிய தேசியக் கட்சியின்  செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் (Palitha Range Bandara) மகன் யசோத ரங்கே பண்டார  கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (29) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருவலகஸ்வெவ – மீ ஓயா 07 ஆம் மைலுக்கு அருகிலுள்ள அலிமங்கட பிரதேசத்தில் அவர் பயணித்த கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவலகஸ்வெவ காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...